சென்னை
சென்னை சட்டசபை உறுப்பினர் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகளுமாகத் திகழ்ந்தவர் எஸ் பி வேலுமணி. அதிமுகவில் கொங்கு மண்டலத்தில் பெரும்புள்ளியாக விளங்கும் எஸ் பி வேலுமணி மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவர் கோவை ஸ்மார்ட் சிடி திட்டம், மேம்பாலம், கோவை மேம்பாட்டுப் பணிகள் என ரூ.1500 கோடி ஊழல் செய்துள்ளதாகக் கோவையைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் புகார் அளித்திருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் தமிழகம் முழுவதும் ரூ.5000 கோடி ஊழல் செய்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தற்போது சென்னை சட்டசபை உறுப்பினர் விடுதியில் வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வேலுமணியின் கோவை இல்லம் உள்ளிட்ட இடக்களில் வருமான வ்ரி சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் எஸ் பி வேலுமணி இல்லம் உள்ளிட்ட 52 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.