நெல்லை: நெல்லை அருகே தனியார்பள்ளியில்,   வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை  கொடுத்த புகாரின் பேரில்  அரசு உதவி பெறும் தனியார் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர் மீது  போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுஉள்ளது. இதனால், அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். அவரை  தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை அருகே வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு  செய்யப்பட்ட நிலையில், நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ஹென்றி செல்வன் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள்  ஆசிரியர்களால் கொடுக்கப்பட்டு வந்த சம்பவங்கள் சமீப காலமாக புற்றீசல் போல வெளியாகி பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பழமையான பள்ளியான  தூய யோவான் பள்ளி  (செயின்ட் ஜோசப்) ஆசிரியர்கள் 2 பேர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரபல கல்லூரியான செயின் சேவியர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியை மதுகுடிக்க அழைத்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

இந்த சலசலப்புஅடங்குவதற்குள்,  மற்றொரு கிறிஸ்தவ பள்ளிஆசிரியர்மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளது.  நெல்லை அருகே ஒரு கிராமத்தில் உள்ள  தனியார் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஹென்றி செல்வன் என்பவர்,  கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவி  முதலில் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தநிலையில், பின்னர்   மாணவியின் பெற்றோர் தரப்பில் பள்ளி தலைமையாசிரிடம் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்தே,  பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.  இதனால் அவர் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஹென்றி செல்வன் ராஜ்குமாரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டார்.  ஆனால் அவர்மீது பள்ளி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.

இதனால்,  பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பிறகே குறிப்பிட்டஆசிரியர் மீது  போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள்  போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், ஆசிரியர் தலைமறைவாகி உளளார். அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! திருச்சி அரசு மருத்துவர் கைது…

 

தொடரும் பாலியல் புகார்: சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு நோட்டீஸ்…!

பள்ளிகளில் தொடரும் பாலியல் சேட்டைகள்: பாளை. தூய யோவான் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்படுவார்களா?

மது விருந்துக்கு மாணவியை அழைத்த பாளை. சவேரியார் கல்லூரி பேராசிரியர் கைது!