சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வைச் சேர்ந்த அன்னியூா் சிவா இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி அங்கு இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது வாக்கு எண்ணிக்கை 14ந்தேதி நடைபெற்றது. . இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து,  விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக  தேர்வு செய்யப்பட்ட  திமுகவின் அன்னியூர் அ.சிவா  இன்று  பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிவாவுக்கு  பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில்,   அமைச்சர்கள், காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.