சென்னை

சென்னை அண்ணா பலகலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தி அண்ணா பல்கலைக்கழக இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 650 ஆகவும் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட்டது. மேலும் ஆய்வறிக்கை கட்டணம் இளநிலை மாணவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டதாகவும். பட்டச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சான்றிதழ்களை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்வதற்கான கட்டணமும் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது

 

மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர்,

“இதனால் ஒவ்வொரு மாணவரும் பருவத்திற்கு ரூ. 675, ஆண்டுக்கு ரூ.1350 கூடுதலாக செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம்மட்டும் ரூ.4050 செலுத்துவது என்பது பெரும் சுமையாகும். தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 

ஓராண்டில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் வீதம் 4 ஆண்டுகளில் மொத்தம் 6 லட்சம் மாணவர்கள் இளநிலை பொறியியல் படிக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியது.”

எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையொட்டி தற்போது இந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.  மேலும் செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது எனவும் சிண்டிகேட் மீண்டும் முடிவெடுக்கும் வரை தேர்வு கட்டணம் உயராது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பதாக பொன்முடி அறிவித்துள்ளார்