அமராவதி: ஆந்திராவில் மேலும் 6,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,13,014 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,941 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் 55,282 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 7,798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 6,51,791 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel