திருச்சி:

டந்த 15ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ள டிடிவி தினகரன் அணியினரின் முதல் ஆலோசனை கூட்டம்  வரும் 24ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 15ந்தேதி மதுரை மேலூரில் அமமுக என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ள, கருப்பு சிவப்பு வெள்ளை  கொடியில் ஜெ.உருவம் பொறித்த கட்சி கொடியையும் அறிவித்தார்.

இந்நிலையில் வரும் 24ந்தேதி தனது அமைப்பின் முதல் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை வாழ வைக்கவும், அதிமுகவை மீட்டெடுக்கின்ற லட்சியத்தோடும், மேலூர் பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி திருச்சி பெமினா ஹோட்டல் காவிரி அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

இக் கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொள்வர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.