கல்லீரல் பிரச்சனையால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு வந்த அமிதாப்பச்சன் கடந்த செவ்வாய்க்கிழமை 15ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 1982 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கினார். அப்போது, பலத்த காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்தார். ஆனால், அந்த விபத்திலிருந்து அவரது கல்லீரல் பலகீனம் அடைந்து, அது தொடர்பான பிரச்சனை புதிதாக எழுந்தது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு இணையான தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.