வாட்ஸ்அப் பதிவு:
download
மோடி அமெரிக்கா போனாலும் போனாரு… டிவிட்டரில் ஒரே பதிவா போட்டு தள்ளிகிட்டு இருக்காரு. சென்னைல வெள்ளம் வந்து நூத்துகனக்கான மக்கள் செத்தப்ப கூட பெருசா அலட்டிக்கல. ஆனா அமெரிக்காவுக்கு போனதும் மனுசனுக்கு என்னவோ பண்டிதர் ஜவகர் லால் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு போல கெடைச்ச மாதிரி ஒரு அல்ப பில்டப்பு. அன்னிக்கு அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடி அவர்களே 1961ல் அமெரிக்கா சென்ற நமது ஆசிய ஜோதி நேரு அவர்களை வரவேற்க மரபுகளை மீறி நேரு பெருமகனார் வந்த விமானத்தின் படிகட்டுகளில் ஏறி சென்று வரவேற்றார். இதுவரை வேறு எந்த நாட்டின் தலைவருக்கும் அது மாதிரி ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை.

ராஜிவ் காந்தி அவர்கள் அமெரிக்க சென்ற போது அப்போதைய ஜனாதிபதி அவருடன் பேசியவாரே ராஜிவ் அவர்களுக்கு குடை பிடித்து கொண்டு வந்து காரில் ஏற்றி வழியனுப்புவார். தலைவர் ராஜிவ் சும்மா செம ஸ்டைலா நடந்து வந்து காரில் ஏறும் காட்சி இன்னைக்கு பார்த்தாலும் மெய்சிலிர்க்கும்.
அது போலவே நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையின் ரிசப்ஷனை விட்டு கிழிறங்கி வந்து மன்மோகன் சிங்கின் கார் கதவை திறந்துவிட்டு வரவேற்ற காட்சி இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களை கூட இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இப்படியெல்லாம் சிறப்பிக்கப்பட்ட எங்க தலைவர்கள் யாரும் இதையெல்லாம் தம்பட்டம் அடித்து கொள்ளவில்லை.
ஆனால் இன்று அமெரிக்கா போன பிரதமர் மோடிக்கு யார் வந்து வரவேற்றது தெரியுமா? அமெரிக்க அதிபரோ அல்லது அவரது மனைவி அமெரிக்க முதல் பெண்மணி மிச்சலோ துணை அதிபரோ, ரானுவ அமைச்சரோ அல்ல. மாறாக மோடியை வந்து வரவேற்றது ஒபாமாவின் செக்ரட்டரிகளில் ஒருவர். இப்படி ஒரு அவமானம் நேர்ந்த பின்னும் மோடி “எனது நண்பர் ஒபாமா” என பலமுறை சொல்லியும் டிவிட்டரில் பதிந்தும் தம்பட்டம் அடித்து கொள்ளும் ஒரு பிரதமர் நமக்கு கிடைத்திருக்கிற இதில் இன்னொரு மிக பெரிய அவமானம் என்னனா ஒபமா இன்னும் ஒரு ட்விட்டர் பதிவு கூட மோடி வருகையை பற்றி பதிவிடவில்லை.இன்னம் சொல்ல போனால் இந்தாளு மோடி அவங்க ஊரு வாஷிங்டன்னுக்கு வந்த மாதிரியே அவரு காட்டிக்கல. இந்த அவமானமெல்லாம் எல்லாம் அந்த 31% முட்டாள்களால் வந்த வினை.