ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தியது அமெரிக்கா.

ஈரான் மற்றும் சிரியா-வைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்றிரவு தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படை குண்டு வீசியது.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பின் நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.