சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில்,  செனினையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. முன்னதாக பொதுக்குழுவுக்கு வந்த எடப்பாடிக்கு சாலையின் இருமங்கிலும் தொண்டர்கள் கூடி, மலர்தூவி வரவேற்றனர்.  பொதுக்குழுவில் தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை வானகரத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது அதிமுக பொதுக்குழுவில் 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்குழுவில் வர இருக்கும்  சட்டமன்ற தேர்தல் கூட்​ட​ணி குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை நியமிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இந்த  பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் உசேனுக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவர் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை நியமித்த இபிஎஸ், அவர் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டபேரவைத் தேர்தல் தொடங்கவுள்ளதால் அதிமுகவின் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன.

[youtube-feed feed=1]