சென்னை

மிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் மாணவர்களை சேரக்க உத்தரவிட்டுள்ளது..

சமீபத்தில் நடந்த 2 சுற்று கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் 5-ந்தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜுலை 8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் எனவும் உத்தரவிடபட்டுள்ளது.