நாகை

ரும் 22 ஆம் தேதி முதல்  நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளது

கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு நடந்து வந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து வானிலை மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டது தெரிந்ததே.

நிர்வாகம் மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் எனத் தெரிவித்திருத்தும் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது கப்பல் நிறுவன நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்’

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]