லாகூர்

ஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24  ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள். 3 ஒரு ருநாள் தொடர் மற்றும் ஒரு டி 20 போட்டியில் விளையாடச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது.   இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.  இதையொட்டி தற்போது பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய அணி சென்றுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தது.   அப்போது நடந்த டெஸ்ட் தொடரின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதனால் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே மற்றும் சங்ககாரா காயம் அடைந்தது நினைவிருக்கலாம்.

சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது  பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஆஸ்திரேலிய அணி 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்குச் சுற்றுப்பயணம் செல்லாமல் இருந்த நிலையில் தற்போது அங்குச் சென்றுள்ளது.