காபூல்:
ப்கனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 12 உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்ஹ்டில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை ஹெராத் நகரிலும் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்திலும் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் பல குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.