சென்னை:
ளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கோடி, கோடியாக பணம் சம்பாதித்த தம்பதியர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தம்பதி பெயர் சித்தார்த்த வேலு பிஎச்டி பட்டதாரி. அவரது மனைவி பெயர் பிரிசில்லா மார்க்கரேட். இவர்களது ஒரே மகன் சிங்கப்பூரில் படிக்கிறார்.  இருவரும் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசித்து வந்துள்ளனர். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
key
தம்பதியர் இருவரும் சேர்ந்து பல்வேறு இணையதளங்களை தொடங்கி, அவற்றில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்டு அதன் மூலம் கோடி, கோடியாக பணத்தை சம்பாதித்து வந்துள்ளனர்.  இதன் காரணமாக   அடிக்கடி இடத்தை மாற்றி வந்துள்ளனர்.
கடத்த வருடம் சென்னைக்கு வந்த இவர்கள்  துரைப்பாக்கத்தில்  உள்ள  பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து  வந்தனர். அடிக்கடி அனாதை ஆசிரமங்களுக்கு சென்று வந்துள்ளனர்.  இவர்கள் நடத்தையில் சந்தேகமடைந்தவர்கள் இவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இவர்களை கண்காணித்த சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் வசித்த வீட்டில் இளம் குழந்தைகளின் ஆபாச படங்கள், அது பதிவேற்றம் செய்யப்படும் வலை தளங்கள் பற்றிய விவரங்கள்  உள்ளிட்ட நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தம்பதியர் இருவரும் சேர்ந்து  ஆபாச வெப்சைட் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து  சித்தார்த்த வேலுவும், அவரது மனைவி பிரிசில்லா மார்க்கரேட்டும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடத்தி வந்த ஆபாச இணையதளத்தை முடக்கவும் நடடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சித்தார்த்த வேலு  வங்கி கணக்‘கை ஆராய்ந்தபோது, பெங்களூரு வங்கி ஒன்றில்  ரூ.2.4 கோடி பணம் பிக்சட் டெபாசிட்   செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கை முடக்கி அந்த பணத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.