சென்னை

திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடந்துவரும் நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மீதம் உள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் சாமானிய மக்களுடன் கலந்துரையாடுவது, பஸ் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வது, பொதுமக்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது என எளிய மக்களோடு சகஜமாக பழகி வருகிறார்.

தமிழக வருகையின்போது ஸ்வீட் கடையில் சாதாரணமாக சென்று ஸ்வீட் வாங்கி பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது, உத்தரப்பிரதேசத்தில் சலூன் கடைக்குச் சென்று முக சவரம் செய்து கொண்டது என ராகுல் காந்தியின் பிரசார யுத்தி புது மாதிரியாக இருக்கிறது.

சமீபத்தில் உணவகம் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு சக வாடிக்கையாளர்களுடன் சகஜமாக அமர்ந்து உணவருந்தியதோடு ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைசருமான செல்லூர் ராஜு அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டி இருக்கிறார்  முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜு, ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து ‘நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று பதிவு செய்துள்ளார்.

செல்லூர் ராஜுவின் இந்த பதிவு அதிமுக  வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  அவர் ‘காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் எளிமையாக யார் இருந்தாலும் அவர்களை நான் பாராட்டுவேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க.வு.,க்கு எதிராக களத்தில் இருக்கிறது. மேலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இவ்வாறு இருக்க அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பாராட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.