திருவனந்தபுரம் :
ட்டியலினத்தவர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யபட்டார்.

2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன். இவர் மோசடி செய்து பட்டம் வென்றதாக தேர்வு குழுவிற்கு தெரியவர அவருக்கு கொடுத்த பட்டம் பறிக்கப்பட்டது . படவாய்பே இல்லாத மீரா மீதுன் தனக்கு பின்னால் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று காட்டிக்கொள்ள பணம் கொடுத்து எடுத்த விபரீத முயற்சிகள் தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் மீராமிதுன் தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக தாக்கி பேசிய வீடியோ வெளியாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது ஆண் நம்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறுப்பிட்ட சமூத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் சாடியிருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுன் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

என்னை கைது செய்வது என்பது நடக்காது ; அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்று நடிகை மீரா மிதுன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகது.