சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் தெரிவித்து உள்ளார். திருமணம் செய்வதாக ஏமாற்றி குடும்பம் நடத்தினார் என்று புகாரில் தெரிவித்து உள்ளார்.

மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, ‘நாடோடிகள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயலலிதா ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். டிடிவி தினகரன் ஆதரவாளரான இவர்ல, எடப்பாடி பழனிசாமி எதிராக செயல்பட்டதால், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதாவது, முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.  இந்த 18 பேரில்முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் ஒருவர்.  இதையடுத்து அரசியலில் இருந்து ஓரங்கப்பட்டப்பட்டார்.

இந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏமாற்றுவதாக நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார். அவரது புகாரில்,  “முன்னாள் அமைச்சரான மணிகண்டன், என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 5 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார்”  என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.