சென்னை

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாம் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல தமிழ் திரையுலக முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்று பொதுவெளியில் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“அனைவருக்கும் வணக்கம்.

எங்களுக்கு நேற்று (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற செய்தியை பெருமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.

ஆர்த்தியும் குழந்தையும் நலம்.

ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என்று வேண்டுகிறோம். நன்றி”

எனப் பதிவிட்டுள்ளார்.