சென்னை

சென்னை வீதிகளில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியபடி பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த்துக்கு காவல்துறை ரூ. 2000 அபராதம் விதித்துள்ளது.

தமிழ் திரையுல்கில்  90 களின் காலகட்டத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக டாப் நடிகராக இருந்து வந்தவர் தான் பிரசாந்த். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் எடுத்த முடிவால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

பிரசாந்த் தற்போது விஜய்யுடன் கோட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படமும் பல வருட போராட்டத்திற்கு பிறகு வெளியாக இருக்கிறது. முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தகன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அதற்கு முன்னரே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு ரிலீஸ் தேதியை மாற்றியது.

அந்தகன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் பிரசாந்த் தீவிரமாக ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால்  நடிகர் பிரசாந்த் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.  சமீபத்தில் படத்தை ப்ரோமோஷன் செய்வதாக சாலையில் பைக்கை ஓட்டியபடி ஹெல்மெட் அணியாமல் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஒரு பக்கம் இதுவு ஒரு ப்ரோமோஷனுக்காக தான் இருக்கும் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.