டெல்லி

டெல்லி  தேர்தலில் பாஜக பிரசாரம் குறித்து ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது

பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெரும்.70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த 10 ஆம் தேதி முதல் 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு 18 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. மேல்ம் 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.  டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கிழக்கு டெல்லியின் விஷ்வாஸ் நகர் சட்டசபை தொகுதியில்  நடந்த ஆம் ஆத்மி கூட்டத்தில் \அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி சர்மா,,

”பா.ஜ.க.வில் உள்ள எந்த தலைவரும் அடிமட்ட அளவில் வேலை பார்க்கவில்லை ,  பா.ஜ.க.வில் உட்கட்சி பூசலால், முதல்வர் வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் ஆனது, ஒரு மணமகன் இல்லாமல் திருமண ஊர்வலம் போவது போன்றது என கூறியுள்ளார். ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. நகலெடுத்து உள்ளது”

என்று விமர்சித்துள்ளார்.