சென்னை: தஞ்சையில் இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனை அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டில் கவிதாசன் (25), அவரது நண்பர்கள் திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது வாலிபர் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து இளம்பெண் ஒருவரை  கூட்டு பலாத்காரம் செய்துள்ளதனர். இந்த சம்பவம் அந்த  பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தினர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில்,  போலீஸார் வழக்குப் பதிந்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், , பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு மருத்துவமனை உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்த சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில்,  சம்பவம் நடைபெற்றது அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி புட்டேஜ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தினர்போது சில இளைஞர்கள், இளம்பெண்ணை பாலியல் லாத்காரம் செய்து விட்டு   சாவகாசமாக பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம்  பாப்பாநாடு பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாக  பல்வேறு கட்சி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.