திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டுவார். நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறும். காலை 7.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு கலசாபிஷேகம், 9.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் நடை அடைக்கப்படும்.
பின்னர் மாலை 5மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அத்தாளபூஜை, அதன்பிறகு நடை அடைக்கப்படும். 20-ந்தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
20ம் தேதி இரவு 7.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுவதுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவு பெறும். கொரோனா கட்டுப்பாடு விதி காரணமாக இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 20ம் தேதி பம்பை ஆற்றில் ஆடி அமாவாசை பலி தர்ப்பணம் நடைபெறுகிறது.