திருவனந்தபுரம்:

கேரளாவில் அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேர், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் கணிதம் ஸ்லோகம் மற்றும் ஓம் போன்ற ஸ்லோகங்கள் அடங்கிய குறிப்பேடு வழங்கியதால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தின் புறநகரில் உள்ள அஜிகோட் அரசு உயர்நிலைப்பள்ளில் கணிதப் பாடங்களை எளிதில் கற்கும் வகையில், “கணிதக் கழகத்தின்” நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சரஸ்வதி படத்துடன் கூடிய குறிப்பேடு வழங்கப்பட்டது. இதை தொ

அதில், “கணித பிரார்த்தனை” மற்றும் சரஸ்வதி மற்றும் “ஓம்” ஸ்லோகங்கள் இடம்பெற்றிருந்தன. இது கணிதத்தைக் கற்க உதவும் என்றும்  தினசரி பிரார்த்தனை செய்வதற்கான அறிவுறுத்தல்களுடன் விநியோகிக்கப்பட்டது.

இதை கண்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் பள்ளியில் புகார் கொடுத்து பிரச்சினை செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக  பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் தகராறில் ஈடுபட்டதால், இது பள்ளிக்கல்வித்துறை கவனத்துக்கு சென்றது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி ராஜ்குமார், “இது ஒரு பொதுப் பள்ளி. ஆசிரியர்கள் மதச் சின்னங்களைப் பயன்படுத்தினர் என்பது குற்றச்சாட்டு, இது விதிகளுக்கு எதிரானது” என்று அந்த அதிகாரி கூறினார். சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகளையும் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஆசிரியைகளை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்றும்,  அவர்களை மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் உள்பட பல பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய தலைமை ஆசிரியை, “நாங்கள் பள்ளியைப் பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கு அனைவரின் ஆதரவையும் நாங்கள் விரும்புகிறோம். இது இரண்டு ஆசிரியர்களின் கவனக்குறைவு என்று கூறி உள்ளார்.

இதற்கிடையில், பிரார்த்தனை எழுதிய ராஜலட்சுமி, தனக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், தொலைபேசியில் துன்புறுத்தப்பட்டதாகவும் போலீஸ் புகார் அளித்துள்ளார். கட்டாய விடுப்பில் அனுப்பப்ட்ட ஆசிரியைகளில் ஒருவரான ராஜலட்சுமிதான் கணித படத்தை எளிதில் கற்கும் வகையில்  12 வரியிலான கணித பிரார்த்தனா என்ற ஸ்லோகனை எழுதியிருந்தது  குறிப்பிடத்தக்கது.