புதுச்சேரி:

காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விருப்ப மனு அளித்துள்ள  புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரி  காமராஜர் நகர் தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் 21ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 30ந்தேதி வேட்புமனுதாக்கல் முடிவடைகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் களமிறங்குகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  இடைத்தேர்தலில் போட்டியிட புதுச்சேரி அரசின் டில்லி பிரதிநதி ஜான்குமார் விருப்ப மனு அளித்தார். இதைத்தொடர்ந்து, தனது டில்லி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதன் காரணமாக ஜான்குமார் காமராஜ் நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.