டில்லி:
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு நாடுகளின் நல்லுறவு குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அரசி மேக்ஸிமா இன்று மாலை டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக் துணை தலைவரையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்த அரசி மேக்ஸிமா திட்டமிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel