டில்லி: தேசிய விருதுகளை புறக்கணித்த திரைப்பிரபலங்களுக்கு தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் கையால் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.  ஆனால் முதல் முறையாக 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது வழங்குவார் என்று கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது அளிப்பார் என்று கூறப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த விருதுக்கு தேர்வானவர்களில் 60க்கும் மேற்பட்டோர் விழாவை புறக்கணித்து வெளியேறினர்.
இதற்கிடையில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது வழங்கி கௌரவித்தார்.

இந்த நிலையில் விழாவை புறக்கணித்தவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் தபால் மூலம் வீட்டிக்கே அனுப்பி வைக்க தகவல் ஒலிபரப்பு துறை முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்பு, விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாதவர்களுக்கு தபாலில் அனுப்புவதை மத்திய அரசு வழக்கமாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.