லக்னோ:

உ.பி. மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதியஜனதா அரசு பதவி ஏற்றதில் இருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கொழுந்தனால் துப்பாக்கி முனையில் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் முஷாபர்நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்மனி ஒருவரை அவரது குடும்பத்தை சேர்ந்த கணவரின் தம்பியாலேயே  துப்பாக்கி முனையில் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.

அந்த இளம்பெண்ணின் கணவன் மருந்து வாங்க அருகே உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்றிருந்த வேளையில், வீட்டிற்குள் நுழைந்த அந்த பெண்ணின் மைத்துனர், துப்பாக்கி முனையில் அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி வன்புணர்ச்சி செய்ததாக கூறப்படுகிறது.

அந்த வேளையில் கடைக்கு சென்ற தம்பி திரும்பி வந்த அண்ணன் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், இதன் காரணமாக அவரது தம்பி அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் சென்று அருகிலுள்ள பவோப்பா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால், சுட்டுக்கொன்றுவிடுவேன் என்று மிரட்டிய தாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவரே இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.