சென்னை:
5ம் தேதி நடக்கும் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு பஸ் தொழிலாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 5-ம் தேதி முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 15 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இச்சங்கங்களின் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel