மும்பை:

புகையிலை பொருட்களை சாப்பிட்டதற்கு தற்போது வருத்தமடைகிறேன். இந்த உயிர்கொல்லி குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே யாரோ ஒருவர் என்னை எச்சரித்தார் என்று சரத்பவார் கூறினார்.

மும்பையில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் 2002ம் ஆண்டில் வாய் புற்றுநோயை ஒழிக்கும் இயக்க தொடக்க விழா நடந்தது. உலக சுகாதார தினத்மை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘அறுவை சிகிச்சை, பல் நீக்கம் போன்றவற்றால் வாய் திறக்க முடியாமல் அவதிப்பட்டேன். உணவு சாப்பிடவும், பேசவும் முடியாமல் அவதிப்பட்டேன். புகையிலை பொருட்களை சாப்பிட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

இந்த உயிர் கொல்லி குறித்த 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை யாரே ஒருவர் எச்சரித்தனர். எனினும் தற்போதும் லட்சகணக்கான இந்தியர்கள் தொடர்ந்து புகையிலை சாப்பிடுவது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்’’ என்றார்.

சரத்பவார் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.