
டில்லி:
உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்த லக் ஜிகாத் வழக்கு மார்ச் 5ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண்ணை இஸ்லாமியராக மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், திருமணத்தை கேரள ஐகோர்ட்டு ரத்து செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 8ந்தேதி நடைபெறும் என கூறி ஒத்தி வைத்தனர்.
கேரளாவை சேர்ந்த இளம்பெண்ணான அகிலா, ஹாதியா-வாக கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்பட்டு ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இது லவ் ஜிகாத் என கூறப்பட்டு, ஷபின் ஜஹான் என்பவர் மீது அகிலாவின் தந்தை கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அவர்களின் திருமணத்தை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து ஜஹான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது.
இந்த வழக்ழு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது, ஹாதியா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஹாதியா தெரிவிக்கையில் அதனை செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்தால் எப்படி முடியும். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஹாதியா மேஜர் என்னும் பட்சத்தில் அவர் தான் யாருடன் செல்ல வேண்டும் என்பதை தான் முடிவு செய்ய வேண்டும்.
ஹாதியாவின் முடிவில் கேள்வியெழுப்ப யாருக்கும் உரிமை இல்லை. அதேப்போல் ஹதியாவின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கும் உரிமை இல்லை. எனவே ஹாதியாவின் திருமண நோக்கம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு (NIA) தலையிட இயலாது” என தெரிவித்தது.
அதைதொடர்ந்து ஹாதியா “நான் இஸ்லாமிய பெண், இஸ்லாமிய பெண்ணாகவே என் கணவருடன் வாழ விரும்புகின்றேன்” என்று பிப்ரவரி 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் வழக்கினை பிப்.22-க்கு ஒத்திவைத்தனர்.
அதைத்தொடர்ந்து ஹாதியா வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
[youtube-feed feed=1]