பாட்னா:
பீகாரில் பத்மாவாத் திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டரை மர்ம கும்பல் சூறையாடியது.

தீபிகாபடுகோனே, ஷாகித் கபூர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவாத் படத்திற்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. எனினும் பரவலாக போராட்டங்கள் நடந்து வருகிறது. வரும் 25-ம் தேதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் பீகார் முஷாபர்பூரில் இந்த படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியேட்டரை கர்னி சேனா அமைப்பினர் இன்று அடித்து நொறுக்கினர். படத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Patrikai.com official YouTube Channel