சென்னை:

இந்தியன் வங்கியில் கடன் வழங்கியதில் ரூ.18 கோடி முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதில் இந்தியன் வங்கியின் முன்னாள் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்பர் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மண்டல மேலாளர் சண்முகசுந்தரம், உதவி பொது மேலாளர் சதீஷ்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

[youtube-feed feed=1]