டெல்லி:
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஜி.எஸ்.டி மசோதா கடந்த மாதம் 29-ம் தேதி லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. எந்தவித திருத்தமும் இன்றி அது நிறைவேற்றப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி மசோதா ஜூலை 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.