`
இயேசு கிறிஸ்து பிறந்ததினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வருடந்தோறும் டிசம்பர் திங்கள், 25ம் தேதி உலகமெங்கும் கொண்டாடப் படும் பண்டிகை கிறிஸ்துமஸ்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது.
இந்த நாளில் ,ஒவ்வொரு இல்லத்திலும், உள்ளத்திலும் இறை இயேசு வந்து பாலனாகப் பிறக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன.
ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர்.
எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றதாக வரலாறு கூறுகிறது. 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு “கிறிஸ்துமஸ் தீவு” என்றும் பெயரிடப்பட்டது.

இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது.
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வது கிறிஸ்தவர்களின் பழக்கம்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது.
கடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.

கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகிறது.
இயேசு இந்த உலகத்தில் அவதரித் ததை காண வந்த மக்களுக்கு, ஆகா யத்தில் வால் நட்சத்திரம் தோன்றி, அவர்களுக்கு வழி காட்டியதாக  பைபிளில் கூறப்பட்டு உள்ளது.  இதன் அடையாளமாக தான் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வீட்டின் முன்பு நட்சத்திரம் தொங்க விடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் திருப்பலி, அதற்கு முந்தையாநாளான 24ந்தேதி இரவு 11.30 மணிக்குத் துவங்கும்.
கத்தோலிக்கத் திருப்பலியில் வானமும் பூமியும் படித்தவராம் என்ற செப வழிபாட்டுப் பாடல் ஒன்று பாடப்படும், அதில் சரியாகத் திருமகன் மரியிடம் மனுவானார் என்ற வரிகள் வரும்போது , இன்னிசை முழங்க, ஆலய மணிகள் ஆனந்தக் கூச்சலிட, பாடல் குழுவினர் பாடல் வான் வரை முட்ட, மூடி வைக்கப் பட்டிருக்கும் குடில் திறக்கப்படுவது வழக்கம். அந்த குடிலிலில் இயேசு பாலகனாக காட்சி அளிப்பார்.
மொத்தத்தில் நல்லது ஓங்கவும், தீயது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடுவோம்.

அனைவரும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்….