
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழையின் தாக்கத்தினால் சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. இந்த பகுதி மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள் என்றாலும், பல இடங்களில் வீடுகளை இழந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். .
இந்த நிலையில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துகுடியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel