
டில்லி:
ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதன் எதிரொலியாக சில நிமிடங்களுக்கு முன், டெல்லியில் சிறு அதிர்வு ஏற்பட்டது.
“ஆப்கனில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தின் பாதிப்பால் சிறு அதிர்வு ஏற்பட்டுள்ளது. மற்றபடி இங்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மக்கள் அச்சப்படத்தேவையில்லை” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் வசிக்கும் பத்திரிகையாளர் ஷாஜகானை தொடர்புகொண்டு பேசினோம். அவரும், “மிகச்சிறிய அளவிலான அதிர்வுதான். அச்சப்படும் அளவுக்கு ஏதுமில்லை” என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel