சென்னை: நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த மாதம் இருமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று திடீரென பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 35 காசுகளும், டீசல் லிட்டருக்கு 33 காசுகளும் குறைத்து எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளதை பார்க்கும்போது, விரைவில் மீண்டும் வரலாறு காணாத அளவில் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மத்திய கிழக்கு போர் சூழல், ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடு போன்ற காரணங்களால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுகட்ட கடந்த (மே) 15-ந்தேதி நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்த நிலையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து  இதன்பிறகு, கடந்த 17ம் தேதி (மே )  மற்றும் 19ம் தேதி என இரு நாட்களும் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.104.57-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.96.21-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

[youtube-feed feed=1]