சென்னை: எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று முதல்வர் விஜய்யை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், அலுவலகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படமும், ஆங்கில கால நடைமுறைப்படி, இருக்கையில் போடப்பட்டிருந்த வெள்ளை துண்டை அகற்றியது போன்ற செய்திகளும் இணையத்தில் வேகமாக பரவியது.

இந்த நிலையில், அலுவலகத்தில் அமர்ந்து சாப்பிடுவது போன்று வெளியானது ஏஐ புகைப்படம் என்றும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களும் வெள்ளை துண்டு போடாமல்தான் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இணையத்தில் பதிலடி கொடுக்கப்பட்டன.

ஏற்கனவே ரூ.1500 கோடி மதிப்பு போர் விமான உற்பத்தி திட்டம் ஆந்திரா சென்ற நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ.2500 கோடியில் ஆந்திராவில் முதலீடு’

தமிழ்நாட்டில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டம்’

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்? பட்டியலிட்ட ஊழியரால் பரபரப்பு வாக்குமலம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது’

வேலூர் பொய்கை மாட்டுசந்தைக்கு கோடை வெயிலால் கால்நடைகளின் வரத்து சரிவு’

இந்திய ராணுவ நிலைகளை லைவில் கண்காணித்த பாக். சதி வலையில் சிக்கிய 5 சிறுவர்கள் உட்பட 21 பேர் கைது’

இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் வெளியிட்ட விடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் திமுக ஊடகப் பிரிவு, “சகோதரரின் மாபியா ரீல்ஸ் தொழிற்சாலை முழுவதும் அம்பலமாகி விட்டது. துண்டு சாகசம் முதல் ஏஐ மதிய உணவுப் புகைப்படம் வரை, தவெகவினரின் போலிச் செய்திப் பிரசாரங்கள் அனைத்துத் திசைகளிலிருந்தும் தோலுரிக்கப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளனர். இதனை மறுபதிவிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘‘பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது’’ .

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]