சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் ஆட்டோவில் பயணித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (நவம்பர் 23) நடைபெற உள்ளது. அதன் காரணமாக, தேர்தல் பிரசாரம் இன்றுடன் (ஏப். 21) நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை சைதாப்பேட்டையில், திமுக வேட்பாளர் அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின், அந்த தொகுதியில் ஆட்டோவில் சென்று பிரசாரம் மேற்கொண்டதுடன், அங்கிருந்த கரும்பு ஜூஸ் போடும் கடைக்கு சென்று, தானே கரும்பு ஜுஸ் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடும் வெய்யிலையும் பாராமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]