டெல்லி: தலைநகர் டெல்லி   பாலம் பகுதியில் உள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கவலை தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள ஒரு பல்மாடி குடியிருப்பில் மார்ச் 18   ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட பெண்கள், ஆண்கள் அடங்குவர்.  இந்த தீ விபத்து  குறித்து  தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தவுடன் 30 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், தீ பரவியதால் பலர் உள்ளே சிக்கியிருந்தனர்.

இறந்தவர்களில் பிரவேஷ் (35), கமல் (40), அஷு (32) மற்றும் 12, 6, 5 வயது மூன்று சிறுமிகள் அடங்குவர். இவர்கள் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இஜிஐ மருத்துவமனையில் 38 வயது பெண் ஒருவர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார். 40 வயது ஆண் மற்றும் 2 வயது சிறுமி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சஃப்தர்ஜங் மருத்துவமனையில் 19 வயது இளைஞர் 25% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீயணைப்புத் துறையினர் 10 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். இரண்டு பேர் தீயிலிருந்து தப்பிக்க கட்டிடத்திலிருந்து குதித்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“பாலம் பகுதியில் பல்மாடி குடியிருப்பில்  தீ விபத்து  எப்படி தொடங்கியது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தனவா என்பது குறித்து மேஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது. தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ பரவியதற்கு மின்சார கோளாறு அல்லது கேஸ் கசிவு காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் டெல்லி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டிட பாதுகாப்பு விதிமுறைகள், தீயணைப்பு வசதிகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]