திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  கடந்த ஆண்டு  13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.  கடந்த 2024ல் திருப்பதி கோயிலில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு கூடுதலாக ஒரு கோடி லட்டுகள் விற்பனை செய்து, மொத்தம்  13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்துள்ளது.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் லட்டு பிர​சாதம் உலக பிரசித்தி பெற்​ற​தாகும். மேலும் அங்கு பக்தர்களுக்கு  புளியோதரை, எலுமிச்​சை, தயிர் சாதம், மிளகு வடை போன்​றவையும் வழங்​கப்​பட்டு வந்​தது.  பின்னர் காலத்திற்கு ஏற்றவாறு பிரசாதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டன. அதன்பின்​னர் இனிப்பு சுய்​யம், அப்​பம் , வடை , அதிரசம் வழங்​கப்​பட்​டது. பின்​னர் ஆங்​கிலேயர்​களின் ஆட்சி காலத்​தில் 19-ம் நூற்​றாண்​டில் மஹந்​துக்​கள் திருப்​பதி கோயிலை பராமரித்து வந்​த​போது, பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக பூந்தி வழங்​கப்​பட்​டது.  இதைத்தொடர்த்நது,  1940-ம் ஆண்டு  முதல் பூந்தியை லட்டாக மாற்றி பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்கப்​பட்​டது. அப்​போது முதற்​கொண்டு தொடர்ந்து லட்டு பிர​சாதம் பக்​தர்​களுக்கு திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் விநியோகம் செய்து வரு​கிறது. இந்த லட்சுக்கு உலகம் முழுவதும் தனி மவுசு உண்டு.

கடந்த ஆண்டு தெலுங்கு தேசம்  ஆட்சிக்கு வந்த பின்​னர், லட்டு பிர​சாதத்​தின் தரம் உயர்த்​தப்​பட்​டது. இதனால் லட்டு பிர​சாத விற்​பனை​யும் அதி​கரித்​துள்​ள​தாக அதி​காரி​கள் தெரிவிக்​கின்​றனர்.

கடந்த 2024-ம் ஆண்​டில் 12.15 கோடி லட்​டு​கள் விற்​பனை​யாகி உள்​ளது. இதுவே கடந்த 2025-ல் 13.52 கோடி லட்டு பிர​சாதங்​கள் விற்​பனை​யாகி சாதனை படைத்​துள்​ளது. இதில் கடந்த டிசம்​பர் 27-ம் தேதி மட்​டும் ஒரே நாளில் 5.13 லட்​சம் லட்​டு​கள் விற்​பனை​யாகி உள்​ளன. கடந்த ஓராண்​டாக சராசரி​யாக நாள் ஒன்​றுக்கு 4 லட்​சம் லட்​டு​கள் விற்​பனை​யாகி உள்​ளன. பிரம்​மோற்​சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்​தமி உள்​ளிட்ட முக்​கிய நாட்​களில் தின​மும் 8 முதல் 10 லட்​சம் லட்​டு​கள் விற்​பனைக்கு வைக்​கப்​படு​கிறது. ஏழு​மலை​யான் கோயில் மடப்​பள்​ளி​யில் மட்​டும் 700 ஊழியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். சமீபத்​தில் இவர்​களுக்​காக ஊதி​ய​மும் உயர்த்​தப்​பட்​டது என்​பது குறிப்​பிடத்தக்​கது.

[youtube-feed feed=1]