சென்னை: ஜனவரி 5 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் கரூரில் செப்.27-ம் தேதி அன்று பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி (ரோடு ஷோ), பேரணி உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கடந்தநவ.28-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று (டிசம்பர் 19) காலை தீர்ப்பு வழங்கினர்.

வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதிக்கு முன்னதாக இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று மனுதாரர்களிடம் தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தனர்.

முன்னதாக,  செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலி்ல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து அரசியல் கட்சிகளின் ரோடுஷோக்கள், பொதுக்கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள்சக்தி கட்சி சார்பில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கட்சிகள் சார்பில் பரிந்துரை.. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. தமிழக அரசு சார்பி்ல் இதுதொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பிலும் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். ஜனவரி 5ந்தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

[youtube-feed feed=1]