சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின்,  இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது  என்றவர், அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் டிட்வா புயல் சேதம் தவிர்க்கப்பட்டது  என சென்னையில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில்  தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான குழுவின் 3வது கூட்டம், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு உள்ளது என தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாக பார்க்கிறோம். டிட்வா புயலின் கோரத் தாண்டவத்தை பார்த்தோம். பேரிடரால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பார்த்தோம்.‘  ஆனால் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாமல் தமிழகத்தை காப்பாற்றியுள்ளோம். நாம் அட்வான்ஸ் ஆக நிறைய பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

எப்போதாவது புயல் தாக்கும் என்ற நிலையை நாம் தாண்டிவிட்டோம். அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. அலையாத்தி மரக்காடுகளின் பரப்பளவு இருமடங்கு அதிகரித்துள்ளது. மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சுற்றுச்சூழல் குறித்து வழங்கப்படும் பயிற்சியில் காலநிலை மாற்றம் பற்றி எடுத்துரைக்கப்படும். பசுமை பள்ளி வகுப்பறைகளில், வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 297 பசுமை பள்ளிகளில் கூல் ரூப் திட்டம் செயல்படுத்தப்படும்.

பொது போக்குவரத்தின் பயன்பாடு குறைவதால் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு அதிகரிக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்தவே 120 மின்சார பேருந்து சேவை அறிமுகம். மேலும் 600 மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்போகிறோம்.அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால் சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண். பேரிடர் நிதியாக 24,000 கோடிக்கு மேல் கேட்கப்பட்டிருந்த நிலையில் ஒன்றிய அரசு வெறும் 17% மட்டுமே வழங்கியது.

மக்கள் அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தவேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண்.

த மிழ்நாட்டில் அலையாத்தி காடுகளின் பரப்பளவு 2 மடங்கு அதிகரித்துள்ளது. மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. கால நிலை மாற்றம், நெகிழி ஒழிப்புக்காக 200 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக எல்லா துறைகளிலும் பெயர் வாங்கியுள்ளது.

இவ்வாறு  பேசினார்.
[youtube-feed feed=1]