டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபாவளி அன்றே வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டடி இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும்,   ‘ஜனவரி 26 அன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தேன்’ என்று முக்கிய சந்தேக நபரான டாக்டர் முசம்மில் வாக்குமூலம் அளித்துள்ளார்; ஜம்மு காஷ்மீரின் குல்காமில் 200 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம்  நடை பெற்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இந்த கார் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில், படித்த பல மருத்துவர்கள் ஈடுபட்டு இருந்தது மக்களிடையே மருத்துவர்கள் மீதான மதிப்பை சீர் குலைத்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பெண் மருத்துவர்  5 மருத்துவர்கள் உள்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் குண்டு வெடிப்பு காரில் வந்த மருத்துவர் குறித்தும்  விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம்  தீவிர விசாரணை நடைபெற்ற வருகிறது. இதில், செங்கோட்டை அருகே நடந்த கார்வெடிப்பு தொடர்பான விசாரணையில், ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மருத்துவ நிபுணர்கள் குழு இதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜம்மு – காஷ்மீர் காவல்துறை இந்த அமைப்பை “வெள்ளை காலர் பயங்கரவாத அமைப்பு” என்று தெரிவித்துள்ளது.

விசாரணையின்போது, முசம்மிலின் போனில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும், அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டதாகவும் அதன் ஒருபகுதியாகத்தான் செங்கோட்டையைச் சுற்றிப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதைச் செயல்படுத்த முடியவில்லை என்றும் முசம்மில் காவல் துறை அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக மக்கள்  நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே  நவம்பர் 10ந்தேதி (திங்கள்கிழமை) இரவு 7 மணி அளவில் வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 கார், முதலில் மெதுவாக சென்ற நிலையில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில், 12 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தின் முக்கிய நபராகக் கைது செய்யப்பட்டுள்ள முசாம்மில், செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் முன்னதாகவே தானும் உமரும் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்த பெண் டாக்டர் ஷாஹீன் கைது