தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சந்தீப் மேத்தா மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்கள் தெருநாய்கள் இல்லாத இடமாக மாற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். தவறுகளுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட வல்லுனர்களின் ஆலோசனையின் பெயரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த உத்தரவுகளை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் 8 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.

தெருநாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரேதச அரசுகள் அடுத்த விசாரணை தேதிக்கு முன்பாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக ஏதேனும் மெத்தனம் இருந்தால் அது தீவிரமாகக் கருதப்படும் என்று தனது உத்தரவில் கூறியுள்ளார்.