திருவனந்தபுரம்: கேரள அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், கூட்டணி கட்சியான, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, இந்த திட்டம் அமல்படுத்துவதை  நிறுத்தி வைத்துள்ளது. இதை மாநில  முதல்வா் பினராயி விஜயன் உறுதிப்படுத்தி உள்ளார்.

கேரளத்தில் மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை  மாநில முதல்வர்  பினராயி விஜய் தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டு, சமீபத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், , அந்தத் திட்டம்அமல்படுத்துவது நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வா் பினராயி விஜயன்  தெரிவித்தாா். மேலும்,  இத்திட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய ஒரு குழுவையும் அவா் அறிவித்தாா்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான நாடு முழுவதும்  பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத் தமிழ்நாடு, கேரள உள்பட சில மாநிலங்கள் மட்டுமே எதிர்த்து வருகிறது.

. இந்த நிலையில், மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கேரள அரசு திடீரென அண்மையில் கையொப்பமிட்டது. மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காகவே கேரள அரசு இந்த முக்கியமான முடிவை எடுத்ததாக மாநில கல்வி அமைச்சா் சிவன்குட்டி தெரிவித்தாா்.

இது ஆளும் கூட்டணியில் பெரும் சா்ச்சையாக வெடித்தது. ‘தங்களுக்குத் தெரியாமலேயே கேரள அரசின் கல்வித் துறை இந்த ஒப்பந்தத்தைச் செய்தது; இது கூட்டணி முடிவுகளை யும், கூட்டணியின் கூட்டு ஒழுங்கையும் மீறிய செயல்’ என்று ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமா்சித்தது.

இதைத் தொடா்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பினோய் விஸ்வத்தை அமைச்சா் சிவன்குட்டி சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போதும் அவா்கள் உடன்படவில்லை. ‘பிஎம் ஸ்ரீ ஒப்பந்தம் மிக ரகசியமாக செய்யப்பட்டதற்குப் பின்னால் ஏதோ சதி இருக்கலாம். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முதல்வா் பினராயி விஜயனும் கூட்டணிக் கட்சிகள் உள்பட ஒட்டுமொத்த கேரள மக்களிடமிருந்தும் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களை மறைத்துவிட்டனா்’’ என்று காங்கிரஸை சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டினாா்.

இந்த விவகாரம் பெரும் சா்ச்சையானதைத் தொடா்ந்து, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வா் பினராயி விஜயன்  மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் மீது கவலைகளும் சா்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், மாநிலத்தில் அத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கென, கல்வி அமைச்சா் சிவன்குட்டி தலைமையில் அமைச்சா்கள் கே.ராஜன், பி.ராஜீவ், ரோசி அகஸ்டீன், கே.பிரசாத், கே.கிருஷ்ணன் குட்டி, ஏ.கே. சசீந்திரன் ஆகியோா் கொண்ட மாநில அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் வரை, மாநிலத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்ட நடைமுறை நிறுத்திவைக்கப்படும்.

இதுதொடா்பாக மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றாா்.