கொல்கத்தா: இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என மேற்குவங்க பெண் முதல்வர், அதாவது தன்னை வங்கபுலி என பீற்றிக்கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாலிபான் மனநிலையில் பிதற்றி உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா பானர்ஜியின் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும்  கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மம்தாவின் கூற்று பிற்போக்குத்தனமானது, மாநிலத்தில் பெண்களுக் கான எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடும் நிலையில்,  மாநிலத்தை ஆளும் பெண் முதல்வரே, பெண்களுக்கு எதிராக,  தாலிபான் மனநிலையில் பிதற்றி  இருக்கிறார். இது அவரது பிற்போக்குத்தனத்தை காட்டுகிறதுரு  என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

துர்காபூரில் எம்பிபிஎஸ் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைப் பற்றி உரையாற்றும் போது அவரது கருத்துக்கள் வந்தன, குற்றவாளிகள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று அவர் உறுதியளித்தார். அதே நேரத்தில் கல்லூரிகள் இருட்டிய பிறகு பெண்கள் வெளியே செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் இரவில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன் என  நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்  ( ஞாயிற்றுக்கிழமை)  கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா ஆட்சிக்கு வந்த பிறகு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மேலும் அவரது நடவடிக்கை ஒரு தரப்புக்கு ஆதரவாக இருப்பதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல முறை மம்தா அரசை கடுமையாக சாடியுள்ளன. ஏற்கனவே  கடந்த ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த கொடூர பாலியல் கொலையை ஓரு கும்பலே செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், மம்தா அரசு ஒரே சஞ்சய் ராய்  என்ற  ஒருவரை மட்டுமே கைது செய்து விட்டு, முக்கிய தடயங்களை அழத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படுகொலை சம்பவத்தை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23வயது இளம் பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு (அக்.10)  ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தில் ஒதுக்குபுறமான இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. தற்போது மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். மீண்டும் மருத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் கடுமையாக  விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சம்பவம். மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதேவேளை இதுபோன்ற குற்றங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தை குறிவைப்பது சரியல்ல.

மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் எவ்வளவு சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஒடிசாவில், கடற்கரைகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?. நாங்கள் 1-2 மாதங்களுக்குள் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். மேலும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது”” என முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு மம்தா பேசினார்.

பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: மகள் சடலம் முன்பு போலீசார் பணம் கொடுத்தனர்! உயிரிழந்த மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டு…

மம்தாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சந்தேஷ்காலி பாலியல் வன்புணர்வு விவகாரம்: திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் கைது

https://patrikai.com/kolkata-horror-mamata-letter-to-pm-modi-to-requests-stringent-central-legislation-to-combat-hate-crimes-against-women/