டெல்லி: பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு 10நாட்கள் முன்புவரை பெயர்களை சேர்க்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

பீகார் தேர்தல் தேதிகளை அறிவித்தத தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, நவம்பர் 6-இல் முதல்கட்ட வாக்குப்பதிவு, நவம்பர் 11-இல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், முதல்முறை வாக்காளர்கள் 14 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 7.42 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்காக , அவர்கள் தகுந்த அவணங்களுடன் பெயர் சர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன் வரை, வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவ. 10-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவ. 13-ஆம் தேதியும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ந்தேதி நடைபெறுகிறது.
https://patrikai.com/november-6-11-bihar-assembly-election-vote-in-two-phases-results-on-november-14/