டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் இதேபோல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பம்பாய் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளத, மேலும் நீதிமன்றத்தில் விசாரணை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாகம் காலி செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பம்பாய் உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியில் கட்டிடம் வெடிக்கப்படும் என்று மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) படி அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிதல் படை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.